News August 12, 2024
வாணியம்பாடி சிறுமி நிதியுதவி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜனதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரித்திகா. இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜிடம் வயநாடு நிலச்சரிவிற்கு தான் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணத்தை ஒப்படைத்தார்.
Similar News
News March 6, 2026
திருப்பத்தூரில் லஞ்சம் கேட்டால் ‘கம்பி’ நிச்சயம்!

தற்போதைய சூழலில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்த இந்த எண்களை தெரிஞ்சிக்கோங்க. திருப்பத்தூர் DSP-04179-299100, வடக்குமண்டல பிரிவு எஸ்.பி-044-22321090 / 22321085, லஞ்ச ஒழிப்பு கட்டுப்பாட்டு அறை-044-22321090/22321085, TOLL FREE NO-1064, மாவட்ட கண்காணிப்பு அலுவலர்-7373004517 .*யாரேனும் லஞ்சம் வாங்கினால் உடனடியாக CALL பண்ணவும். உங்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். நண்பர்களுக்கும் பகிருங்கள்*
News March 6, 2026
‘தோல்’ கொடுக்குமா ஆம்பூர் தொகுதி?

திமுகவிடம் IUML ஆம்பூர் தொகுதியை கேட்டதாக கூறப்படுகிறது. ஒருவேளை ஆம்பூரில் IUML போட்டியிடும் பட்சத்தில், சிறுபான்மையின வாக்குகளை முழுமையாகத் திரட்டுவது எளிதாக இருக்கும். அதே சமயம், காலம் காலமாக நீடித்து வரும் தொழிற்சாலை பிரச்சனைகளுக்கான தீர்வுகளை முன்வைப்பவர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என பேசப்படுகிறது. முந்தைய தேர்தலில் வாணியம்பாடியில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளில் IUML தோல்வி அடைந்தது.
News March 6, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (மார்ச் 5) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் பட்டியல் மற்றும் தொலைபேசி எண்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அவசர காலங்களில் பொதுமக்கள் இந்த எண்களைத் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பு கருதி இந்தத் தகவல் பகிரப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


