News May 15, 2024
வாணியம்பாடி அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் சிரசு திருவிழா கடந்த 3 தினங்களாக நடைபெற்று வரும் நிலையில், விழாவில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் திம்மாம்பேட்டை போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News April 21, 2025
ஏரியில் குளிக்கச் சென்றன் மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

திருப்பத்தூரை சேர்ந்த ஆர்யா (12) என்ற மாணவர் பெங்களூருவில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், நண்பர்களுடன் பெரியவெங்காயப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஏரியில் குளித்துக் கொண்டிருந்த ஆர்யா, திடீரென தண்ணீரில் மூழ்கினார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
News April 20, 2025
திருப்பத்தூர் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

▶️வட்டாட்சியர்,வாணியம்பாடி – 9445000512
▶️வட்டாட்சியர்,திருப்பத்தூர் – 9445000511
▶️வட்டாட்சியர்,திருப்பத்தூர்- 9445000511
▶️வட்டாட்சியர், நாட்றம்பள்ளி – 9384095150
▶️வட்டாட்சியர், ஆம்பூர் – 9443000478
▶️தாசில்தார், திருப்பத்தூர் – 9944853282
▶️வட்டாட்சியர், திருப்பத்தூர் – 9600883699
▶️தாசில்தார், வாணியம்பாடி – 7904947335
▶️மண்டல வட்டாட்சியர்,திருப்பத்தூர் – 9047228349
SHARE பண்ணுங்க மக்களே
News April 20, 2025
திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை ஏப்ரல் 21 அன்று திங்கள் தின வாராந்திர மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவ சவுந்தரவல்லி தலைமையில் காலை 10 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி ஆட்சியரிடம் அளித்து பயன்பெறலாம். இந்தக் கூட்டத்தில் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.