News August 7, 2024
வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் கவனத்திற்கு…

வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு சிபிஐ தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், சிபிஐ சின்னத்தையும், அதிகாரிகள் பெயர்களையும் பயன்படுத்தி மர்ம நபர்கள் போலி ஆவணம் தயாரித்து சம்மன் அனுப்புவதாகவும், வாட்ஸ்அப் அழைப்பு மேற்கொண்டு மிரட்டி பணம் பறிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆதலால் போலி நபர்களிடம் ஏமாறாமல் இருக்க மக்கள் விழிப்புடன் இருக்கும்படி சிபிஐ அறிவுறுத்தியுள்ளது. PLS SHARE IT
Similar News
News April 8, 2026
FLASH: கடலூரில் கால் பதிக்கும் விஜய்!

கடலூரில் நாளை தேர்தல் பரப்புரை செய்ய விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மஞ்சை நகர் மைதானத்தில் காலை 10 மணி முதல் 1 மணி வரை பரப்புரை மேற்கொள்ள காவல்துறை அனுமதி அளித்துள்ளது. மேலும், வடலூர், சேத்தியாத்தோப்பு, தொழுதூரில் விஜய் வேனில் இருந்தவாரே பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில், தவெகவினர் அனுமதி கேட்டு கடிதம் அளித்துள்ளனர். இன்று நெல்லையில், விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளது கவனிக்கத்தக்கது.
News April 8, 2026
கட்டிப்பிடிப்பதும் அன்பு தான்: கியாரா அத்வானி

சாரா அர்ஜுனின் தோளில் ராகேஷ் பேடி(71) முத்தமிட்டது வைரலாகி நெட்டிசன்களின் விமர்சனத்துக்குள்ளானது. இதற்கு தந்தை-மகள் பாசத்தின் வெளிப்பாடு என ராகேஷ் விளக்கமளித்திருந்தார். இந்நிலையில், சமீபத்திய நிகழ்வில் கட்டிப்பிடிக்க தயங்கிய ராகேஷை கியாரா அத்வானி கட்டிப்பிடித்து அன்பு பாராட்டினார். இதனையடுத்து, ஒரு வரைமுறை இல்லாமல் கிசுகிசுக்கக்கூடாது; கட்டிப்பிடிப்பது என்பது அன்பின் வெளிப்பாடுதான் என்றார்.
News April 8, 2026
வரலாறு காணாத விலை குறைந்தது.. மகிழ்ச்சி செய்தி

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளது. ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், கச்சா எண்ணெய், கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிவாயு பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. இந்நிலையில், அமெரிக்கா – ஈரான் இடையே 2 வாரங்கள் <<19594820>>போர் <<>>நிறுத்தப்படும் என்ற அறிவிப்பால், கச்சா எண்ணெய் விலை 17% சரிந்து பீப்பாய் ஒன்று $95 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.


