News August 7, 2024

வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் கவனத்திற்கு…

image

வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு சிபிஐ தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், சிபிஐ சின்னத்தையும், அதிகாரிகள் பெயர்களையும் பயன்படுத்தி மர்ம நபர்கள் போலி ஆவணம் தயாரித்து சம்மன் அனுப்புவதாகவும், வாட்ஸ்அப் அழைப்பு மேற்கொண்டு மிரட்டி பணம் பறிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆதலால் போலி நபர்களிடம் ஏமாறாமல் இருக்க மக்கள் விழிப்புடன் இருக்கும்படி சிபிஐ அறிவுறுத்தியுள்ளது. PLS SHARE IT

Similar News

News October 17, 2025

16 வயது பெண்ணுடனான பாலியல் உறவு குற்றமல்ல: HC

image

2005-ல் 16 வயது பெண், தனது விருப்பத்தால் இஸ்லாம் என்பவரை திருமணம் செய்துள்ளார். ஆனால், தனது மகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண்ணின் தந்தை தொடுத்த வழக்கில், இஸ்லாம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், இஸ்லாமின் மேல்முறையீட்டை விசாரித்த அலகாபாத் HC, முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ், திருமணமாகி 16 வயது பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டது குற்றமாகாது என கூறி, தண்டனையை ரத்து செய்தது.

News October 17, 2025

மனம் கவர்ந்த மகா நடிகைக்கு இன்று ஹேப்பி பர்த்டே!

image

சினிமா பின்னணியில் இருந்து வந்தாலும், இன்று இந்திய சினிமாவில் தனி இடத்தை உருவாக்கி உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தேசிய விருதை வென்ற இவரின் சினிமா கேரியர், பல வெற்றிகளையும் விமர்சனங்களையும் உள்ளடக்கியது. தென்னிந்திய சினிமாவில் உச்சம் தொட்டவர், தற்போது பாலிவுட்டிலும் தனது தடத்தை பதிக்க தொடங்கிவிட்டார். உங்களுக்கு பிடிச்ச கீர்த்தி சுரேஷ் படம் எது?

News October 17, 2025

PoK உருவாவதற்கு நேருவே காரணம்: ஜிதேந்திர சிங்

image

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) உருவாவதற்கு வழிவகுத்த போர் நிறுத்தத்திற்கு நேருவே காரணம் என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேலுக்கு சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமையை அளித்திருந்தால், பாக்., – காஷ்மீர் பிரச்னையே எழுந்திருக்காது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் இந்தியாவின் வரலாறே மாறியிருக்கும் என்றும் கூறினார்.

error: Content is protected !!