News March 23, 2024
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாமக வேட்பாளர்

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரக்கோணம் மக்களவைத் தொகுதி வேட்பாளரான வழக்கறிஞர் பாலு பொதுமக்களிடையே இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் வேட்பாளர் பாலுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Similar News
News August 14, 2025
ராணிப்பேட்டை: சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு தீவிரம்

ராணிப்பேட்டை மாவட்டம், இன்று (ஆகஸ்ட் 15) நாட்டின் 79 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் பாதுகாப்புப் பணிக்காக 615 போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் தெரிவித்துள்ளார். மேலும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் தெரிவித்தார்.
News August 14, 2025
ராணிப்பேட்டை: ரூ.72,000 சம்பளத்தில் வேலை!

ராணிப்பேட்டை மக்களே, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதும், சம்பளம் ரூ.72,000 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.08.2025 தேதிக்குள் <
News August 14, 2025
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அறிக்கை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலான ஆய்வுக் கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்களின் நிலை, நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் பயன்பாடு மற்றும் மாவட்டத்திலுள்ள முகாம்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். இந்த அறிக்கை, பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் நலத் திட்டங்களின் முன்னேற்றங்களை எடுத்துக்காட்டுகிறது.