News March 19, 2026
வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர், எஸ்பி கூட்டாய்வு

மயிலாடுதுறையில் உள்ள ஏவிசி கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைப்பது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மற்றும் எஸ்பி கோ.ஸ்டாலின் ஆகியோர் நேற்று கூட்டாய்வு மேற்கொண்டனர். அப்போது வாக்குகள் பதிவாகிய இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை, கண்காணிப்பு அறை, ஊடக அறை ஆகியவற்றை பார்வையிட்டு வாக்கு எண்ணும் அறையின் பாதுகாப்பு அம்சங்களை விரிவாக ஆய்வு செய்தனர்.
Similar News
News April 8, 2026
தேர்தல் பொறுப்பு அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி தேர்தல் பொறுப்பு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஹெச் எஸ் ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கமலக்கண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
News April 8, 2026
மயிலாடுதுறையில் பழமையான இடங்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் வரலாற்றில் மிகப்பழமையான பல வரலாற்றை கொண்டுள்ளது.
அவற்றில் மிக முக்கியமாக:-
பூம்புகார் – 1600 ஆண்டுகள் பழமை
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் – 1100 ஆண்டுகள் பழமை
டென்மார்க் கோட்டை (டேனியக் கோட்டை) – 400 ஆண்டுகள் பழமை
கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் – 1100 ஆண்டுகள் முற்பட்டது
வைத்தீஸ்வரன்கோவில் – 1000 ஆண்டுகள் பழமை
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News April 8, 2026
மாயவரம்: காலி இடம் இருக்கா? ரூ.50,000 அரசு வழங்கும்!

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ஏக்கருக்கு ரூ.50,000 வரை வருடத்திற்கு கிடைக்கும்.
1. இதனை பெற இங்கு <
2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க
3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளே தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.


