News June 4, 2024
வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறிய நயினார்

நெல்லை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் 1.50 லட்சம் வாக்குகளுடன் 2ஆம் இடத்தில் உள்ளார். இந்த நிலையில், காலை முதல் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்துவந்த பாஜக வேட்பாளர் நயினார், திடீரென அங்கிருந்து வெளியேறிச் சென்றார். இதனால், பாஜக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News August 27, 2025
ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது வழக்குப்பதிவு

ராஜஸ்தானில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், தீபிகா படுகோன் ஆகியோர் உட்பட ஹூண்டாய் நிறுவனத்தின் 6 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தான் வாங்கிய காரில் உற்பத்தி குறைபாடுகள் இருப்பதால் ஹுண்டாய் நிறுவனம் மற்றும் அதன் பிராண்ட் தூதர்கள் மீது ராஜஸ்தானை சேர்ந்த பெண் புகார் அளித்துள்ளார். சட்டப்படி பிராண்ட் தூதர்கள் குறைபாடான பொருள்களை விளம்பரப்படுத்தினால் அவர்களுக்கும் அதில் பொறுப்புள்ளது.
News August 27, 2025
ஜாக் மாவின் பொன்மொழிகள்

✪ கனவுகளின் அழகை நம்புபவர்களுக்குதான் எதிர்காலம் சொந்தம்
✪ ஒரு விஷயத்தில் விடாப்பிடியாக இருந்தால் உங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு உண்டு
✪ உலகை மாற்ற வேண்டும் என்றால் நீங்கள் வித்தியசமானவராக இருக்க வேண்டும்
✪ யோசனை எதுவென்பது முக்கியமல்ல; அது செயல்படுத்துவதுதான் கெட்டிக்காரத்தனம்
✪ உங்களுக்கு ஒரு கனவு இருந்தால், அதைப் பிடித்துக்கொண்டு ஒருபோதும் விடக்கூடாது.
News August 27, 2025
மேற்கு வங்க மக்கள் திருடர்களா? மம்தா பதிலடி

மாநில முதல்வருக்கு மரியாதை கொடுக்காமல், மேற்கு வங்க மக்கள் அனைவரும் திருடர்கள் என்பது போல் PM மோடி பேசியுள்ளதாக CM மம்தா குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் நிதியை TMC விழுங்கிவிடுவதாக மோடி விமர்சித்த நிலையில், PM இவ்வாறு பேசுவார் என எதிர்பார்க்கவில்லை என மம்தா கூறியுள்ளார். மத்திய அரசு உரிய நிதியை மாநிலத்துக்கு வழங்காமல் திருட்டுக் குற்றச்சாட்டை சுமத்துவதாகவும் சாடியுள்ளார்.