News May 28, 2024
வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

அரக்கோணம் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்கு என்னும் மையமான வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி வளாகத்தில் இன்று (மே.28) கலெக்டர் வளர்மதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி நேரில் சென்று தணிக்கை செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வின்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
Similar News
News March 3, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
News March 2, 2026
5.58லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திங்கள்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நிதி உதவி,பேட்டரி சக்கர நாற்காலி,கம்மேடு சக்கர நாற்காலி உள்ளிட்ட ரூ.5.58 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று (மார்ச்.2) வழங்கினார். மாற்றத்திறனாளி அலுவலர் செந்தில்குமாரி உடன் இருந்தார்.
News March 2, 2026
வாலாஜா வட்டாட்சியர் பொறுப்பேற்பு வாழ்த்து

வாலாஜா வட்டாட்சியராக நடராஜன் இன்று மார்ச் 2ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ,வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இங்கு ஏற்கனவே பணியாற்றி வந்த வட்டாட்சியர் ஆனந்தன் ராணிப்பேட்டை மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டார்.


