News May 15, 2024
வாக்கு எண்ணும் மையத்தில் தமிழக தேர்தல் அதிகாரி ஆய்வு

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி பொதுத்தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில்
பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த இயந்திரங்கள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரன், எஸ்பி சந்தீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
Similar News
News September 13, 2025
செப்டம்பர் 15 – முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

செப்டம்பர் 15ஆம் தேதி முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா மாவட்ட முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் திமுக மாவட்ட கழக செயலாளர் முத்துராமலிங்கம் அனைத்து பேரூர் ஒன்றிய நகர நிர்வாகிகள் அனைவரையும் அண்ணா திருஉருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்ற உறுதிமொழியை அனைவரும் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
News September 13, 2025
ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை

ராமேஸ்வரத்தில் ஆடி புரட்டாசி மற்றும் தை அமாவாசை உள்ளிட்ட தினங்களில் உள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்த வருகின்றனர். எனவே, செப்டம்பர் 21ஆம் தேதி மகாளய அமாவாசை கொண்டாடப்பட இருப்பதால் ரயில் பயணிகள் சங்கம் சார்பாக மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இரு மார்க்கமாக சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
News September 13, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம்

இன்று (செப்.12) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என்று காவல்துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.