News May 20, 2024
வாக்குவாதம் செய்த ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இன்று (மே 20) பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். நேற்று இரவு வள்ளியூருக்கு போகாது எனக் கூறி பயணியிடம் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் வாக்குவாதம் செய்து பேருந்தை அங்கேயே நிறுத்தினர். இது குறித்த புகாரின்பேரில் நாகர்கோவில் போக்குவரத்துக் கழக மேலாளர் அந்த ஓட்டுநர் நடத்துநரை பணியிட நீக்கம் செய்தனர்.
Similar News
News November 11, 2025
நெல்லை: கம்மி விலையில் சொந்த வீடு – APPLY!

நெல்லை மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்கு <
News November 11, 2025
நெல்லை: கொடுமுடியாறு அணையில் நீர் திறப்பு

நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கபட்டது. 52.50 அடி உயரமுள்ள இந்த அணையின் நீர்மட்டம், கடந்த மாதம் பெய்த மழையால் 50 அடி தாண்டியது. தற்போதைய நிலவரப்படி நீர்மட்டம் 49 அடியாக உள்ளதால் நாங்குநேரி ராதாபுரம் வட்டங்களில் உள்ள விவசாயிகள் கோரிக்கை ஏற்று, அணையை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டதால் பேரவை தலைவர் அப்பாவு தண்ணீரை திறந்து வைத்தார்.
News November 11, 2025
நெல்லை: டிகிரி போதும்…வங்கியில் வேலை!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


