News March 23, 2024
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள்

சிவகங்கை மக்களவைத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு, மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நாளை(24.03.2024) அன்று அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளது. எனவே, அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் இப்பயிற்சியினை திறம்பட பெற்று, தங்களுக்கான தேர்தல் பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 5, 2025
சிவகங்கைக்கு புதிய முதன்மை கல்வி அலுவலர் நியமனம்

சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடம் கடந்த ஆறு மாதமாக காலியாக இருந்ததால், தற்போது கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக உள்ள க.பாலதண்டாயுதபாணி என்பவரை சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இன்று நியமிக்கப்பட்டிருப்பதாக, பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 4, 2025
கண்மாய் குத்தகை எடுக்க விண்ணப்பிக்கலாம்

அமராவதி புதூர், செஞ்சை நாட்டார், சங்கராபுரம் மற்றும் பாதரக்குடி ஆகிய கண்மாய்களின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு 04575-240848 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது adfsivaganga@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரியின் வாயிலாகவோ தொடர்பு கள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News November 4, 2025
சிவகங்கை: 12th முடித்தால் ரூ.71,900 சம்பளத்தில் வேலை ரெடி!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


