News April 19, 2024

வாக்குச்சாவடியில் நீண்ட “க்யூ”

image

நெல்லை மாவட்டம் முழுவதும் இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தொடர்ந்து மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு இடைவிடாமல் நடைபெற்றது. சில இடங்களில் தொடர்ச்சியாக மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வள்ளியூர் எஸ் ஏ புனித உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மாலை ஐந்து மணிக்கு மேலும் ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் வாக்களிக்க காத்திருந்து வாக்களித்தனர்.

Similar News

News November 10, 2025

நெல்லை: வாக்காளர் பட்டியல் விபரங்கள் வெளியீடு!

image

நெல்லை மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க SHARE பண்ணுங்க.

News November 10, 2025

நெல்லை: 500 கிலோ வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கல்

image

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் ஆளில்லாத வீட்டில் கேரளாவிற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் அந்த ஆளில்லாத வீட்டிற்கு அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அங்கு மூட்டை மூட்டையாக 500 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News November 10, 2025

நெல்லையில் இலவச தையல் மற்றும் ஆரி ஒர்க் பயிற்சி

image

தமிழ்நாடு அரசின் “வெற்றி நிச்சயம்” திட்டத்தின் கீழ், ஐஸ்வர்யா ஸ்ரீ கல்வி நிறுவனம், திருநெல்வேலியில் இலவச தையல் மற்றும் ஆரி ஒர்க் பயிற்சி வழங்குகிறது. மூன்று மாதங்களுக்கு நடைபெறும் இந்தப் பயிற்சியில் 30 நபர்களுக்கு மட்டும் சேர்க்கை வழங்கப்படும். பயிற்சிக்காலத்தில் மொத்தம் ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க நவ. 11 இறுதி நாள். விபரங்களுக்கு 90250 79679 தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!