News January 18, 2026

வாக்குகளுக்காக நிலத்தை தாரைவார்த்த காங்கிரஸ்: PM

image

காங்., ஆட்சியில் பல தசாப்தங்களாக ஊடுருவல் அதிகரித்து வந்ததாக PM மோடி விமர்சித்தார். அசாமில் ₹6,957 கோடியிலான காசிரங்கா உயர்மட்ட பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய பின் பேசிய அவர், காங்., வாக்கு வங்கி அரசியலுக்காக அசாம் மாநிலத்தின் நிலத்தை ஊடுருவல்காரர்களிடம் ஒப்படைத்ததாக குற்றஞ்சாட்டினார். ஊடுருவல்காரர்களை வெளியேற்றி, அசாமின் அடையாளத்தை பாஜக பாதுகாத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Similar News

News February 6, 2026

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (பிப்.07) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, வெரைட்டி ஹால் ரோடு, தியாகி குமரன் மார்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம் ஒரு பகுதி, உக்கடம் ஒரு பகுதி, கலெக்டர் அலுவலகம், கோவை ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, லாரிப்பேட்டை, பீடம்பள்ளி, கலங்கல், பாப்பம்பட்டி, கண்ணம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News February 6, 2026

பராசக்தி OTT ரிலீஸுக்கு தடை இல்லை!

image

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தை OTT-யில் வெளியிட தடையில்லை என சென்னை HC தெரிவித்துள்ளது. அப்படத்தின் கதை தன்னுடையது என்று இணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில், ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் போன்ற வரலாற்று நிகழ்வுக்கு யாரும் காப்புரிமை கோர முடியாது என்றும், பராசக்தி படக் கதை முழுவதும் சுதா கொங்கராவால் எழுதப்பட்டது எனவும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.

News February 6, 2026

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு இடைஞ்சல்: உதயநிதி

image

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்தவொரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்று DCM உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு என்கிற வார்த்தையே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை எனவும், மத்திய அரசு TN-ஐ பல வகைகளில் வஞ்சித்து, பல்வேறு இடைஞ்சல்களைக் கொடுத்து வருவதாகவும் அவர் சாடியுள்ளார். நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை முடிக்கும் முன்பே EPS பாராட்டு தெரிவித்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!