News December 1, 2024
வாக்கிங் சென்றவர்கள் வேன் மோதி பலி

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் நடைபயிற்சி சென்ற மூவர் வேன் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மலையப்பன், நிர்மலா, செல்லம்மாள் என்ற மூவர் இன்று காலை சாலையோரம் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமான வந்த ஆம்னி வேன் அவர்கள் மீது மோதியது. அதில், மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வேன் ஓட்டுநர் மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர்.
Similar News
News April 29, 2025
திமுகவினர் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்?

ஆவணங்களிலிருந்து ‘காலனி’யை நீக்கினால் போதுமா, திமுகவினர் மனங்களில் இருந்து எப்போது அகலும் என எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். தி.மலை, பாணாம்பட்டு கிராமத்தில் குடிநீர் தொட்டியின் மீது மனிதக் கழிவு பூசப்பட்டுள்ளது. இதுபோன்ற கொடூரச் செயல்கள் CM கவனத்திற்கு வருகிறதா? என கேள்வி எழுப்பிய அவர், திராவிட மாடல் ஆட்சியில் பட்டியலின மக்கள் படும் துன்பங்களுக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என சாடினார்.
News April 29, 2025
செல்வத்தை கொடுக்கும் அட்சய திருதியை குபேர வழிபாடு!

காலை குளித்து, வீட்டில் இருக்கும் லட்சுமி நாராயணன், குபேரனின் படங்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, பூமாலைகளை சாற்றுங்கள். ஒரு செம்பில் அரிசி, மஞ்சள், சிறிய நகைகளை வைத்து, அருகில் குத்து விளக்கு ஏற்றி வைக்கவும். தேங்காயை மாவிலை கலசம் தயார் செய்து அதன் முன், நுனி வாழை இலையில் அரிசியைப் பரப்பி, விளக்கு ஏற்றி, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்கவும். நெய்வேத்தியமாக பால் பாயாசம் செய்யலாம்.
News April 29, 2025
இன்ஸ்டாவால் வந்த விபரீதம்.. இளம்பெண் கேங் ரேப்

இன்ஸ்டா நண்பரை பார்க்கச் சென்ற இளம்பெண், கேங் ரேப் செய்யப்பட்டுள்ளார். ஜார்கண்ட், ராஞ்சியை சேர்ந்தவர் விஷ்ணு. இன்ஸ்டா மூலமாக இளம்பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்த அவர், ஆசைவார்த்தைகளை கூறி அருகில் உள்ள மலைக்கு அழைத்து சென்றுள்ளார். நம்பி வந்த பெண்ணை, அங்கு ஏற்கனவே காத்திருந்த நண்பர்களுடன் சேர்ந்து கேங் ரேப் செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸ் மூவரையும் கைது செய்துள்ளது.