News November 6, 2024
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் சிறப்பு முகாம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியை தகுதி பெறும் தேதியாக கொண்டு 18 வயது நிரம்பிய அனைவரும், வாக்காளராக தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளுவதற்கான வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணி இன்று 29ஆம் தேதி புதுச்சேரியில், காரைக்கால் துவங்கப்படுகிறது. நவம்பர் 9, 10 மற்றும் 23, 24 தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும்.
Similar News
News September 13, 2025
புதுவை: 500 அங்கன்வாடி பணியாளர்கள் நியமனம்!

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை தேசிய ஊட்டச்சத்து மாதம் தொடக்க விழா கம்பன் கலை அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “அங்கன்வாடிகளில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு தேவையான முட்டை, கொண்டைக்கடலை, சத்துமாவு வழங்கப்படுகிறது. புதிதாக 500 அங்கன்வாடி ஊழியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட இருக்கிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 13, 2025
ஏழை மாணவனுக்கு உதவி கரம் நீட்டிய ஆட்சியர்

புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவன் ராஜகுரு இவருக்கு அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தும், தனது வறுமையால் படிக்க முடியாமல் தவித்து வந்தார். இவருடைய நிலைமையை அறிந்த மாவட்ட ஆட்சியர் குலோதுங்கன் இன்று மாணவனின் வீட்டுக்கு சென்று மாணவனுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்கி உதவி கரம் நீட்டி நெகழ்ச்சியை ஏற்படுத்தினார்.
News September 13, 2025
காரைக்கால்: சாலையை ஆய்வு செய்த ஆட்சியர்

கோட்டுச்சேரி கொம்பன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வரிச்சிக்குடி காமராஜர் சாலையில் நடைபெற்று வரும் சாலை பணிகளை, மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் அவர்களுடன் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா இன்று (13.9.2025) ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.