News November 15, 2024
வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் – நாளை சிறப்பு முகாம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள 669 வாக்குச்சாவடி மையங்களில் நாளை நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பெயர் நீக்குதல், திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் www.voters.eci. gov.in என்ற இணையதளத்தின் மூலமாக பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ளலாம் எனவே பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News March 1, 2026
வேலூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 1, 2026
வேலூரில் குடிநீரே வழங்காமல் வரி வசூல்?

பள்ளிகொண்டா பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று மாதாந்திர மன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய கவுன்சிலர்கள், ”ரூ.30 கோடியில் 3 ஆண்டாக நடந்து வந்த அம்ருத் திட்டப் பணிகள் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியும், இன்னும் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. 1,13,14 ஆகிய வார்டுகளில் குடிநீர் வழங்காமலேயே காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு வரி வசூல் செய்து வருகிறார்கள்” என புகார் தெரிவித்துள்ளனர்.
News March 1, 2026
வேலூரில் சிறுவன் பரிதாப பலி!

பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகன் அதிரூபன் (8). இந்நிலையில், சிறுவன் அதிரூபன் அதேபகுதியில் உள்ள விஜயகுமார் என்பவரது பேக்கரி அருகே நேற்று விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது எதிர்பாராவிதமாக திடீரென சுவர் சரிந்து அதிரூபன் மீது விழுந்தது. அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்ட போது, சிறுவன் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து, உமராபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


