News March 25, 2024

வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி துவக்கம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாராளுமன்ற தேர்தலினை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களின் விழிப்புணர்வு பேரணியினை
மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா இ.ஆ.ப., இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Similar News

News August 20, 2025

கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – எச்சரிக்கை

image

கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, மேட்டூரிலிருந்து காவிரியாற்றில் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருக்குமாறும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News August 20, 2025

அரியலூர்: SBI வங்கியில் வேலை வாய்ப்பு

image

அரியலூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates (Customer Support and Sales) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இங்கே <>கிளிக் செய்து<<>>, வரும் ஆக.26-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். வங்கி வேலை தேடும் நபர்களுக்கு இதை மறக்காம SHARE பண்ணுங்க!

News August 20, 2025

அரியலூர்: கோழி பண்ணை அமைக்க 50% மானியம்

image

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க! <<17460375>>(பாகம்-2)<<>>

error: Content is protected !!