News November 11, 2024
வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை வேண்டுகோள்

“இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தாங்கள் வாகனம் ஓட்டும் பொழுது செல்போன் பயன்படுத்தக் கூடாது; அவ்வாறு பயன்படுத்தினால் கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது; மேலும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மதிப்பதுடன் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிய வேண்டும்” என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை இன்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
Similar News
News September 11, 2025
முத்து நகர் பீச்சில் நாளை முதல் கடல் கொண்டாட்டம் நிகழ்ச்சி

சூரிய அஸ்தமனக் காட்சியை பிரமிக்க வைக்கும் மிக அழகிய கடற்கரை இடங்களில் ஒன்றான முத்து நகர் கடற்கரை வேடிக்கை, ஓய்வு, சாகசத்தின் சரியான தொகுப்பாக உள்ளது. இங்கு நாளை(செப்.12) முதல் செப்.14 வரை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் கடல் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கயாக், படகுபோட்டி, கடல்நீச்சல் உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை காண பொதுமக்களுக்கு அனுமதி உண்டு. SHARE IT
News September 11, 2025
தூத்துக்குடி: டிகிரி போதும் ரூ.78,000 சம்பளத்தில் வங்கி வேலை..!

இந்திய ரிசர்வ் வங்கியில் Grade B ஆபீசர் பணியிடங்களுக்கு 120 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.78,450 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் 10.09.2025 முதல் 30.09.2025 ம் தேதிக்குள்<
News September 11, 2025
தூத்துக்குடியில் 13 காவலர்கள் மாற்றம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 55 காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் காவல் நிலைய எழுத்தர்கள் உயர் அதிகாரிகள் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் காவல் நிலைய எழுத்தர்கள் சரிவர செயல்படாமல் இருந்தனர். எனவே அதன் பேரில் அந்த 13 எழுத்தர்களும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.