News May 15, 2024
வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு

பாதூர் குறுக்கு ரோடு பகுதியில் நேற்று 70 வயது மதிக்கத்தக்க முதியவர் அடையாளம் தெரியாத வாகன மோதியதில் உடல் நசுங்கி உயிரிழந்தார். இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. இது குறித்து எந்த பகுதியை சேர்ந்தவர் என்று திருநாவலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தில் உயிரிழந்த முதியவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News July 8, 2025
தகவல் கையேடுகளை வழங்கும் பணிகள் தொடக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு திட்டமான, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் (07.07.2025) திங்கள் கிழமை கள்ளக்குறிச்சி நகராட்சி 20வது வார்டு பகுதியில் தொடங்கி வைக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
News July 7, 2025
தகவல் கையேடு வழங்கும் பணிகளை பார்வையிட்ட ஆட்சியர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின்கீழ் கள்ளக்குறிச்சி நகராட்சி, 20வது வார்டு ஏமப்பேர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், இன்று (07.07.2025) தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணிகளைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
News July 7, 2025
திருமண தடை நீக்கும் பச்சையம்மன்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கொணலவாடி கிராமத்தில் அமைந்துள்ள பச்சையம்மன் கோயில், சுற்றுவட்டாரத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆலயமாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு வந்து பச்சையம்மனை வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கி, விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். ஷேர் பண்ணுங்க…