News December 26, 2024

வள பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

சேலம் மாவட்ட வள பயிற்றுனர் பணி இடத்துக்கு எழுத்து, நேர்முகத்தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. விண்ணப்பிப்போர் 25- 55 வயதுக்குள் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் 3 ஆண்டு அனுபவம் தேவை. தமிழ், ஆங்கிலம் எழுத படிக்க, பேசுவதில் சிறப்புடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலக அறை எண் 207-ல் உள்ள திட்ட இயக்குநர் அறையில் வரும் டிச.31 மாலை 5க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Similar News

News November 14, 2025

சேலம்: உள்ளூரில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்!

image

சேலம்: அயோத்திபட்டினத்தில் செயல்பட்டு வரும் Sri Krishnav electronic and mobile நிறுவனத்தில் ஆண், பெண் என இருபாலருக்கும் தலா ஒரு Front sales officer பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு பேச்சுத்திறன், வாடிக்கையாளர் சேவை மற்றும் ஏதேனும் விற்பனை அனுபவம் ஆகியவை இருப்பது அவசியம். சம்பளம் ரூ.10,000 வரை வழங்கப்படுகிறது. +2 முதல் டிகிரி படித்த 25 வயது நிரம்பியவர்கள்<> இந்த லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

News November 14, 2025

இளைஞர் விபரீத முடிவு சேலம் அருகே சோகம்!

image

சேலம்; உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்த 25 வயதான கூரியர் ஊழியர் பிரபாகரன், முதுகு தண்டுவட பாதிப்பால் ஏற்பட்ட தொடர் வலியால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். அறுவை சிகிச்சை செய்தும் வலி குறையாததால், மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை!

News November 14, 2025

சேலத்தில் நாளை ஆசிரியர் தகுதி தேர்வு!

image

தமிழ்நாடு முழுவதும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு ஒன்று மற்றும் இரண்டு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் 12 மையங்களில் 4,646 பேர் தேர்வு எழுதுகின்றனர். நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை 48 மையங்களில் 18,847 பேர் தேர்வு எழுதுகின்றனர். காலை 9:30 மணிக்குள் தேர்வுக்கு வரவேண்டும் இல்லை என்றால் அனுமதி வழங்கப்பாடது!

error: Content is protected !!