News September 28, 2024
வள்ளியூரில் மாபெரும் கபடி போட்டிக்கு அழைப்பு

நெல்லை மாவட்ட வள்ளியூர் வழக்கறிஞர்கள் சங்கம் நடத்தும் இரண்டாம் ஆண்டு வழக்கறிஞர்கள் பங்குபெறும் மாநில அளவிலான மாபெரும் பகல் மற்றும் இரவு கபடி போட்டி இன்று (செப்.28) மற்றும் நாளை மறுநாள் (செப்.29) வள்ளியூர் கலையரங்கத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியை நெல்லை மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் நெல்லை ஏ ஆர் ரகுமான் தொடங்கி வைக்க உள்ளார். அனைவரும் கலந்து கொள்ளுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
Similar News
News January 30, 2026
நெல்லை: கோயிலில் திருடிய நபருக்கு 3 ஆண்டு சிறை

நெல்லை உத்தம பாண்டியன்குளம் கிராமத்தில் உள்ள கோவிலில் திருடிய வழக்கில் நீதிமன்றத்தால் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், வழக்கில் சம்பந்தப்பட்ட ஆறுமுகம்(48) மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதம், கோவிலில் திருடிய குற்றத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி ஜெயசங்கர குமாரி தீர்ப்பளித்தார்.
News January 30, 2026
நிர்வாகிகளை சந்திக்க உள்ளார் – தேமுதிக பொதுச்செயலாளர்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று(ஜன.30) நெல்லை வருகிறார். தாழையூத்து அமேகா பேலஸில் நடைபெறும் நிகழ்ச்சியில் கட்சியின் பூத் முகவர்களை சந்தித்து ஆலோசனை வழங்குகிறார். கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரனும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News January 30, 2026
நிர்வாகிகளை சந்திக்க உள்ளார் – தேமுதிக பொதுச்செயலாளர்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று(ஜன.30) நெல்லை வருகிறார். தாழையூத்து அமேகா பேலஸில் நடைபெறும் நிகழ்ச்சியில் கட்சியின் பூத் முகவர்களை சந்தித்து ஆலோசனை வழங்குகிறார். கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரனும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


