News February 14, 2025
வள்ளலார் மறைந்த திருவறை மூடப்பட்டு சீல் வைப்பு

கடலூர் மாவட்டம் மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் மறைந்த திருஅறை திறக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காலை 12 மணிக்கு திறக்கப்பட்ட திருஅறை பக்தர்கள் தரிசனம் செய்த பின்பு இரவு 7 மணிக்கு கதவு மூடப்பட்டு கோவில் செயல் அலுவலர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மேலும் அடுத்த ஆண்டு இந்த சீல் அகற்றப்பட்டு திருவரை தரிசனம் நடைபெறும்.
Similar News
News November 11, 2025
கடலூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <
News November 11, 2025
கடலூர்: வயிற்று வலியால் விபரீத முடிவு

திட்டக்குடி அடுத்த கொடிகளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (45). டிரைவரான இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்றுவலி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த அவர் கொட்டாரம் அருகே உள்ள ரைஸ் மில்லில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ஆவினங்குடி போலீசார் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News November 11, 2025
கடலூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

கடலூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <


