News April 5, 2024
வலங்கைமான் பகுதியில் அதிரடிப்படை அணிவகுப்பு

திருவாரூர்: மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் உத்தரவின்படி திருவாரூர் மற்றும் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பதற்றமான வாக்கு சாவடி என கண்டறியப்பட்ட வலங்கைமான் பகுதியில் நேற்று கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் திருவாரூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் பி. மணிகண்டன், நன்னிலம் உட்கோட்ட கண்காணிப்பாளர் சரவணகுமார் தலைமையில் போலீசார் மற்றும் மத்திய அதிரடி படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
Similar News
News September 7, 2025
திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.,6) இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News September 6, 2025
திருவாரூர்: கோழிப்பண்ணை அமைக்க மானியம்

திருவாரூர், நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் இலவச கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியம் வழங்கப்படுகிறது. இதனை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பித்து பெறலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News September 6, 2025
திருவாரூர்: ITI, டிப்ளமோ போதும்.. சூப்பர் வாய்ப்பு

திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ முடித்த விருப்பம் உள்ளவர்கள்<