News March 30, 2025
வருடத்திற்கு ஒருமுறை மட்டும் திறக்கப்படும் கிணறு?

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகத்திற்கு மார்க்கண்டேயர் வேண்டுதலுக்கிணங்க காசி கங்கை நீர் கிணற்றில் தோன்றியதாக வரலாறு. கிணறு தோன்றிய பங்குனி மாத அஸ்வினி நட்சத்திரத்தில் அசுபதி தீர்த்தவாரி நடைபெறும். காசிக்கு கங்கா தீர்த்தத்திற்கு நிகராக போற்றப்படும் இந்த கிணற்றில் புனித நீராட ஒரு நாள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அத்தகு சிறப்புமிக்க அசுபதி திருவிழா நாளை திங்கட்கிழமை(மார்ச்31) நடைபெற உள்ளது
Similar News
News February 11, 2026
மயிலாடுதுறை: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

மயிலாடுதுறை மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <
News February 11, 2026
மயிலாடுதுறை: ரயில் சேவை மாற்ற அறிவிப்பு

ரயில்வே பராமரிப்பு பணியின் காரணமாக, மயிலாடுதுறையில் புறப்பட்டு திருச்சி வழியாக செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் வருகிற பிப்ரவரி 11, 13, 16, 18, 20, 23, 25, 27 ஆகிய தேதிகளில் ஆடுதுறையிலிருந்து புறப்பட்டு செல்லும், மயிலாடுதுறையில் இருந்து புறப்படாது. மேலும் திருச்சியில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை வரும் ரயில், ஆடுதுறையில் நிறுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 11, 2026
மயிலாடுதுறை: இனி உங்கள் ஆதார் அட்டை வாட்ஸ் அப்பில்

மயிலாடுதுறை மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘90131 51515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <


