News April 4, 2025
வரி செலுத்தாத வீடுகளுக்கு சீல்

குற்றாலம் பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி வசூலிக்கும் பணி கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வசூலிக்கப்பட்டு இந்நிலையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இறுதி நாள் 31.03.2025 ஆகும் 31.03.2025 வரை காத்திருந்தும் சொத்து வரித்தொகை ரூபாய் 6,20,626/-நிலுவை இருந்ததில் சொத்து வரி செலுத்தாத நபர்களின் வீடுகளில் சீல் வைக்கப்பட்டது. குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் சுஷ்மா தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Similar News
News September 15, 2025
தென்காசி : பட்டாவில் திருத்தமா??

தென்காசி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு மாவட்ட அதிகாரியை 0462-2500592 அணுகலாம். SHARE பண்ணுங்க!
News September 15, 2025
தென்காசி: நீங்க பட்டதாரியா? ரூ.35,000 வேலை ரெடி!

தென்காசி மக்களே, தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள் 7,972 அலுவலக உதவியாளர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்து 18 முதல் 28 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,000 வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் இங்கே <
News September 15, 2025
தென்காசி: ஆசிரியை வீட்டில் திருட்டு

ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே வசிப்பவர் ஜெயா அற்புதமணி (90). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், நேற்று செப்.14 காலை அருகில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறக்கபட்டு பீரோவில் இருந்த 8 கிராம் தங்க நகை, ரூ. 5 ஆயிரம் திருடு போயிருந்தது. இதுக்குறித்த புகாரின்பேரில், ஆலங்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.