News April 7, 2025
வரி அதிகரிப்பு எதிரொலி: பெட்ராேல் விலை உயருமா?

பெட்ரோல் மீதான கலால் வரியை ₹11இல் இருந்து ₹13-ஆகவும், டீசல் மீதான கலால் வரியை ₹8இல் இருந்து ₹10-ஆகவும் மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதனால், சில்லரை விலையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது, முன்பு கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தபோது குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் அளிக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை இதன்மூலம் ஈடுகட்ட இருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Similar News
News April 8, 2025
முதலீட்டாளர்களுக்கு சின்ன நம்பிக்கை

இந்திய பங்குச்சந்தைகள் இன்று 3.8% சரிந்ததால், முதலீட்டாளர்கள் கடுமையான மன உளைச்சலில் உள்ளனர். நாளையும் இதே நிலை தொடர்ந்தால், என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், சந்தையின் போக்கை முன்கூட்டியே சுட்டிக் காட்டும் கிஃப்ட் நிஃப்டி, தற்போது 30 புள்ளிகள் உயர்ந்து காணப்படுகிறது. இது பெரிய நம்பிக்கையை அளிக்காவிட்டாலும், இறங்காமல் இருக்கிறதே என்று முதலீட்டாளர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்
News April 8, 2025
PM இன்டர்ன்சிப்: யார்-யார் விண்ணப்பிக்கலாம்?

PM இன்டர்ன்சிப் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.5,000, ஒருமுறை ரூ.6,000 மத்திய அரசு அளிக்கிறது. இத்திட்டத்திற்கு ஏப்.15 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு யார்-யார் விண்ணப்பிக்கலாம் என பார்க்கலாம். இந்தத் திட்டத்திற்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பாக 21- 24 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. IIT, IMM-ல் படித்தோர், CA, CMA படித்தோர் விண்ணப்பிக்க முடியாது.
News April 8, 2025
சீனாவுக்கு வரி மேல் வரி

மற்ற நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்து வரும் வரியால் பெரும் வர்த்தகப் போரே நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சீனா மீது மேலும் 50% வரி விதித்து அதிர்ச்சியளித்திருக்கிறார் டிரம்ப். இதனால், சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருள்களுக்கு 84% வரி செலுத்த வேண்டும். அமெரிக்காவுக்கு சீனா 34% வரி விதித்த அடுத்த நாளே தனது வரியை உயர்த்தியிருக்கிறார் டிரம்ப்.