News July 8, 2025
வரதட்சணை கொடுமை-கணவர் குடும்பத்தினர் மீது புகார்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷபானா (23) என்பவருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஹுசைன் என்பவருக்கும் கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தினர் ஷபானாவின் 13½ பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு இன்னும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியதாக, ஷபானா நேற்று பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி-யை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளார்.
Similar News
News September 21, 2025
பணிநியமன ஆனை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (செ.20) சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் நடத்தப்பட்ட தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நேரில் பார்வையிட்டு, தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் சிவசங்கர். உடன் மாவட்ட ஆட்சியர் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் அரசு அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News September 20, 2025
பெரம்பலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

பெரம்பலூர் மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா? தமிழக அரசு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தையல் இயந்திரம் வழங்கி வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க எந்த ஒரு கல்வி தகுதியும் இல்லை. விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். உதவும் உள்ளம் கொண்ட நாகை மக்களே இதனை SHARE பண்ணுங்க.
News September 20, 2025
Breaking: பெரம்பலூர் மக்களிடம் மன்னிப்பு கேட்ட விஜய்

தவெக தலைவர் விஜய் தற்போது தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பரப்புரையை தொடங்குவதாக விஜய் அறிவித்த நிலையில் திருச்சி மற்றும் அரியலூரில் மட்டுமே பரப்புரை மேற்கொள்ள முடிந்தது. பெரம்பலூர் மாவட்டத்திற்கு செல்ல முடியாத காரணத்தால் இன்று (செப்.,20) நாகையில் நடந்த பரப்புரையில் விஜய் பெரம்பலூர் மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.