News March 14, 2025

வயலில் பூச்சி கடித்து பெண் உயிரிழப்பு

image

ராணிப்பேட்டை, சங்கரம்பாடி கிராமம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (60). இவர் கடந்த 9ம் தேதி தனது வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது பூச்சி கடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அனால் நேற்று (மார்ச்13) சிகிச்சை பலனின்றி ஜெயலட்சுமி உயிரிழந்தார். காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News August 27, 2025

ராணிப்பேட்டை: அமெரிக்கா விதித்த வரியால் வேலை இழப்பு

image

அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பல தோல் தொழற்சாலைகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மேல்விஷாரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் தோல் தொழிற்சாலைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் ரூ.100 கோடி ஏற்றுமதி பாதிக்கும் என கூறப்படும் நிலையில் லட்சக்கணக்கானோர் வேலை இழப்பார்கள் என தொழிற்துறை வல்லுனர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். உங்க கருத்தை பதிவு செய்து ஷேர் பண்ணுங்க

News August 27, 2025

BREAKING: ராணிப்பேட்டை – 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே இன்று (ஆக.27) 14 வயது சிறுவன் நீரில் முழ்கி உயிரிழந்த சம்பம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களுடன் விவசாய கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி 10ஆம் வகுப்பு மாணவன் ராஜேஷ் என்பவர் பரிதாமபாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 27, 2025

ராணிப்பேட்டை: கூட்டுறவு வேலைக்கு விண்ணபிப்பது எப்படி?

image

▶️ ராணிப்பேட்டை கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 45 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. ▶️சம்பளம் ரூ. 23,640 முதல் ரூ. 96,395 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ▶️விண்ணபிக்கhttps://www.drbrpt.in/index.php இணையதளத்திற்கு செல்ல வேண்டும். ▶️பெயர், பிறந்த தேதி, முகவரி, கல்வித்தகுதி, விண்ணப்பதாரரின் புகைப்படம், கையொப்பம் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!