News November 10, 2024

வயநாடு: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி

image

வயநாடு நிலச்சரிவில் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பங்களுக்கு பந்தலூர் மேம்பாட்டு குழு சார்பில் ஏற்கனவே மூன்று குடும்பங்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் வழங்கப்பட்டது . தற்போது சேரம்பாடியில் கணவனை இழந்த செல்மாவுக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி இன்று வழங்கப்பட்டது. பந்தலூர் மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் தீபக் ராம், அனுப், சனுஜா, மகேந்திரன், ஜனனி ஆகியோர் வழங்கினார்கள்.

Similar News

News August 14, 2025

நீலகிரி: இ-நாம் திட்டத்தில் கலெக்டர் அறிவிப்பு!

image

நீலகிரி மக்களே விவசாய விளை பொருள்களை விற்க ‘இ-நாம்’ திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதனால் விவசாய விளை பொருள்களை கொண்டு செல்வதற்கு செலவு குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அனைவரும் இந்த ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலரை அணுகி, ‘இ-நாம் மற்றும் பண்ணை வாயிலாக உற்பத்தி செய்யும் வேளாண் விளை பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து பயனடையலாம். என நீலகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 14, 2025

இ-நாம்’ செயலி வாயிலாக விற்பனை செய்ய அழைப்பு!

image

குன்னுார், ஊட்டி ஆகிய பகுதிகளில் இரு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், ‘இ-நாம்’ திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த முறையில் ஏல நடைமுறைகள் அனைத்தும் மின்னணு முறையில் இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படும். மாவட்ட கலெக்டர் கூறுகையில், விவசாயிகள் அனைவரும் இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அணுகி, ‘இ-நாம் மற்றும் பண்ணை வாயில் வணிகம்’ வாயிலாக உற்பத்தி செய்யும் வேளாண் விளை பொருட்களை அதிக விலைக்கு விற்கலாம்.

News August 14, 2025

தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு கூட்டம்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-யின் கீழ், மாநில தகவல் ஆணையர்கள் ஆர்.பிரியகுமார் வி.பி.இளம்பரிதி, .எம்.நடேசன், ஆகியோர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., முன்னிலையில், நேற்று அனைத்து துறை அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்

error: Content is protected !!