News August 4, 2024

வயநாடுக்கு சென்ற நிவராண பொருட்கள்

image

கூடலுர் ஒசூர் வனத்துறை சார்பில், ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வயநாடுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலச்சரிவில் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு அமைப்பினர் நிவாரணஉதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கூடலுர் ஒசூர் வனத்துறை சார்பில் நேற்று, ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ்பிரபு தலைமையில் அனுப்பிவைக்கப்பட்டது.

Similar News

News September 17, 2025

நீலகிரி: அதிமுக கவுன்சிலர் மகன் தற்கொலை வழக்கில் திருப்பம்!

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் உடற்பயிற்சி நிலையத்தில் அதிக ஊக்க மருந்து எடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்ட அதிமுக கவுன்சிலர் குருமூர்த்தியின் மகன் ராஜேஷ் கண்ணா தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை வழக்கை, தூண்டுதல் வழக்காக மாற்றி போலீசார் விசாரிக்கின்றனர். உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் சிவகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News September 17, 2025

நீலகிரியில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்!

image

மாதந்தோறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிங்கர் போஸ்டில் உள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் ( 19.09.2025) நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியரின் செய்தி குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 17, 2025

உதகை மாரியம்மன் கோயிலில் மோடி பெயரில் சிறப்பு பூஜை

image

உதகை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் முன்னிட்டு நகர பாஜக சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் உதகை நகர  தலைவர் ரித்து கார்திக், மாவட்ட முன்னாள் தலைவர் மோகன்ராஜ் , மாவட்ட பொருளாதார அணி தலைவர் நித்தின் சந்திர சேகர், மாவட்ட துணை தலைவர் அருண், நகர துணை தலைவர்கள்  சுதாகர் மஞ்சுநாத், பட்டாபிராமன்  மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!