News June 1, 2024

வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி ஒத்திவைப்பு

image

உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் 29ஆம் தேதி மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா தலைமையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பயிற்சி நடைப்பெற்றது. இந்த நிலையில் புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியானது சில நிர்வாக காரணங்களால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என உடுமலையில் உள்ள மாவட்ட வன அலுவலக படித்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 21, 2025

திருப்பூர்: ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி!

image

திருப்பூர் ஊத்துக்குளி இடையே ரெயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரெயில்வே போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மொரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சபரிநாதன் என்பது தெரியவந்தது.

News April 21, 2025

திருப்பூர் வட்டாட்சியர் அலுவலர்கள் எண்கள்

image

▶️திருப்பூர் (வ) வட்டாச்சியர் 0421-2200553. ▶️அவினாசி வட்டாச்சியர் 04296-273237. ▶️ பல்லடம் வட்டாச்சியர் 04255-253113.▶️தாராபுரம் வட்டாட்சியர் 04258-220399. ▶️ காங்கேயம் வட்டாட்சியர் 04257-230689. ▶️ உடுமலைபேட்டை வட்டாட்சியர் 04252-223857. ▶️ மடத்துக்குளம் வட்டாட்சியர் 04252-252588. ▶️ திருப்பூர் (தெ) வட்டாட்சியர் 0421-2250192.▶️ ஊத்துக்குளி வட்டாட்சியர் 04294-260360. மக்களே SHARE பண்ணுங்க.

News April 21, 2025

பொதுமக்களிடம் குறைகளைக் கேட்ட கலெக்டர்

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று கலெக்டர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். அதன்படி இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்துகொண்டு பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார்.

error: Content is protected !!