News October 25, 2024
வனவிலங்குகளால் பயிர்கள் சேதம்: நடவடிக்கைக்கு உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். இவ்வாறு விவசாயிகள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 12, 2025
குமரி: குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

தக்கலை அருகே காட்டாத்துறை அடுத்து கீழ மஞ்சாடியைச் சேர்ந்தவர் தோமஸ் (72).கூலி தொழிலாளியான இவருக்கு சொந்தமான தோப்பில் தேங்காய் வெட்டியுள்ளனர். அப்போது அங்குள்ள குளத்தில் ஒரு சில தேங்காய்கள் விழுந்துள்ளன. அதை எடுப்பதற்காக தாமஸ் நீந்தி சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தக்கலை போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 12, 2025
குமரி: VOTER ID-யில் இதை மாற்ற வேண்டுமா?

குமரி மக்களே உங்க VOTER ID-ல் பழைய போட்டோ இருக்கிறதா? அதை மாற்ற வழி உண்டு.
<
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும். இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க
News November 12, 2025
குமரி: 2696 மாணவர்களுக்கு கண் குறைபாடு – அதிர்ச்சி தகவல்

அரசின் பள்ளி சிறார் காணொளி திட்டத்தின் மூலம் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கண்பரிசோதனை செய்யப்பட்டு கண்ணாடிகள் வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில் 39096 சிறுவர்கள் பரிசோதிக்கப்பட்டதில் 2696 மாணவர்களுக்கு கண் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் செல்போன் பயன்பாடா? வைட்டமின் குறைபாடா? என்பது பற்றி மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


