News November 5, 2025
‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டு விழா

நமது தேசிய கீதமான ‘ஜன கண மன’-க்கு அடுத்து நாடு முழுவதும் பிரபலமானது தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’. சுதந்திர போராட்ட காலத்தில் தேச உணர்வூட்டி ஊக்கப்படுத்திய இப்பாடல், இன்றும் உத்வேகம் அளிக்கிறது. 1875-ல் வங்க எழுத்தாளர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் நாவலில் இப்பாடல் இடம்பெற்றது. வரும் நவ.7-ல், அதன் 150-வது ஆண்டை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
Similar News
News January 23, 2026
234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்: செங்கோட்டையன்

தமிழகத்தின் இருபெரும் கட்சிகளும் தங்களுடன் கூட்டணிக்கு வாருங்கள் என கெஞ்சி கொண்டிருப்பதாக செங்கோட்டையன் கூறியுள்ளார். ஆனால், விஜய் தனித்தே நிற்பார், இருப்பினும் நல்ல கூட்டணி அமையும் என நம்பிக்கை தெரிவித்த அவர், 234 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி அடைவோம் என்றார். தவெகவுக்கு நேற்று விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News January 23, 2026
ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் திமுக: நயினார்

பிற மாநிலங்களில் உள்ள பிரச்னைகளுக்கு முதல் ஆளாக போர்க்கொடி பிடிக்கும் திமுக, TN போராட்டக்காரர்களின் மீது அடக்குமுறையை ஏவுவது ஏன் என நயினார் கேள்வி எழுப்பியுள்ளார். கறிக்கோழி உற்பத்தி நிறுத்த போராட்டத்தை பற்றி குறிப்பிட்ட அவர், சொந்த மக்களின் ஜனநாயக குரல்வளையை இரும்புக்கரம் கொண்டு திமுக நெருக்குவதாக கூறியுள்ளார். மேலும், மாநில உரிமைகள் பற்றி பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது என கேட்டுள்ளார்.
News January 23, 2026
100 நாள் வேலை திட்டம்.. இன்று சிறப்பு தீர்மானம்

சட்டப்பேரவையில் நேற்று,100 நாள் வேலையை 150 நாள்களாக உயர்த்தப்படும் என கொடுத்த தேர்தல் வாக்குறுதியை செய்தீர்களா? என EPS எழுப்பிய கேள்விக்கு, ஆமாம் அது உண்மைதான், ஆனால் அதை மத்திய அரசுதான் செய்ய வேண்டும் என்று CM ஸ்டாலின் பதிலளித்தார். இந்நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (ஜன. 23) சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவித்தார்.


