News May 30, 2024

வந்தவாசி: கிணற்றில் மிதந்த பெண் சடலம்

image

வந்தவாசி அடுத்த மங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி. இவர் தனது தாயாருடன் வீட்டில் வசித்து வந்தார். இவர் நேற்று வீட்டில் வளர்க்கும் மாட்டிற்கு தண்ணீர் காட்டுவதற்காக சொந்த நிலத்தின் அருகே சென்ற பொழுது மாட்டின் கயிறு காலில் சிக்கி அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர், கிணற்றில் உடல் அழுகிய நிலையில் தனலட்சுமியின் சடலம் மீட்கப்பட்டது.

Similar News

News August 20, 2025

தி.மலையில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 20) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 20, 2025

தி.மலை: மாதம் 90,000 வரை சம்பளத்தில் வேலை

image

தி.மலை: BANK OF MAHARASHTRA வங்கியில் நிரந்திர பணியாளராக பணி செய்ய ஒரு வாய்ப்பு. அதன்படி ஏதேனும் ஒரு டிகிரி முடித்து 22வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு ஆகஸ்ட் 30க்குள் <>இந்த லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க கட்டணமும் இருக்கிறது. இதற்கு மாதம் 60,000-90,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் எழுத்து தேர்வு அதன் பின் நேர்முக தேர்வும் நடத்தப்படும், வேலை தேடும் நண்பர்களுக்கு பகிரவும்

News August 20, 2025

தி.மலை: செலவு இல்லாமல் கேஸ் போடலாம்

image

தி.மலை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட சேவைகள் மையம் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனை மற்றும் வழக்குகளுக்கான உதவிகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 04175-232845, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE -1800 4252 441,சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். * பகிருங்கள்* விபரங்களுக்கு <<17461700>>CLICK HERE<<>>

error: Content is protected !!