News July 5, 2025
வத்திராயிருப்பு அருகே முதியவர் வெட்டிக் கொலை

வத்திராயிருப்பு மறவர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணமூர்த்தி (57) கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், பாலகிருஷ்ணமூர்த்திக்கும், இவரது மகன்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாலசுந்தரம், அஜித்குமார் ஆகிய இருவரும் பாலகிருஷ்ணமூர்த்தியை அருவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இது குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News July 5, 2025
10th முடித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

விருதுநகர் மக்களே இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் இங்கே <
News July 5, 2025
விருதுநகர் மாவட்டத்தில் சிறந்த ஊராட்சிக்கு ரூ.1 கோடி பரிசு

சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை கௌரவிக்கும் வகையில் 10 ஊராட்சிகளுக்கு விருதுடன் தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோர் <
News July 5, 2025
BREAKING சாத்தூர் பட்டாசு வெடி விபத்தில் பலி 10 ஆக உயர்வு

சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் ஜூலை.1 அன்று கமல்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏற்கனவே 9 பேர் உயிரிழந்த நிலையில் இன்று காலை மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அழகுராஜா (28) என்பவரும் உயிரிழந்தார். இந்நிலையில் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.