News November 22, 2025
வத்தலகுண்டு அருகே நேர்ந்த சோகம்: பெண் பலி

வத்தலகுண்டு பழைய வத்தலகுண்டு பிரிவு பகுதியில் 100 நாள் வேலைக்கு சென்று திரும்பிய பெண்கள் மீது அதிவேகமாக வந்த ஆட்டோ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் ரத்தினம் (54) சம்பவ இடத்திலேயே பலியானார். முத்துலட்சுமி(54), பிச்சையம்மாள்(53) படுகாயம் அடைந்து வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆட்டோ ஓட்டுனர் தப்பி ஓடினார். வத்தலகுண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 22, 2025
திண்டுக்கல்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

திண்டுக்கல் மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!
News November 22, 2025
திண்டுக்கல்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

திண்டுக்கல் மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!
News November 22, 2025
பழனி ரயில் நிலையத்தில் பயங்கரம்!

பழனி ரயில் நிலையத்தில் நவம்பர் 21ஆம் தேதி, அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.


