News November 10, 2025

வட பசுபிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

image

வடக்கு பசுபிக் பெருங்கடலில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக NCS தெரிவித்துள்ளது. இது பூமியின் மேற்பரப்பில் இருந்து வெறும் 10 கி.மீ., ஆழத்தில் தான் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் ஏற்படும் ஆழமான நிலநடுக்கத்தை விட, மேற்பரப்பில் ஏற்படும் ஆழமற்ற நிலநடுக்கங்கள் ஆபத்தானது. ஏனெனில், அவை பூமியின் மேற்பரப்பில் வலுவான அதிர்வை ஏற்படுத்தி, அதிக சேதத்தை உண்டாக்கும் என NCS தெரிவித்துள்ளது.

Similar News

News November 10, 2025

டெல்லி கார் வெடிப்பு: அமித்ஷாவிடம் PM ஆலோசனை

image

தலைநகர் டெல்லியில் நடத்த கார் வெடிப்பில் 10 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வெடிவிபத்து குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், PM மோடி தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனிடையே கார் வெடிவிபத்து குறித்து டெல்லி தனிப்படை போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.

News November 10, 2025

கர்ப்பிணிகள் செய்யவே கூடாத தவறுகள்

image

கர்ப்ப காலத்தில் பெண்கள் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். இந்த காலகட்டத்தில் செய்யும் சில தவறுகள் தாயையும், சேயையும் பாதிக்கலாம். ➤காபி, டீ அதிகமாக அருந்த வேண்டாம் ➤டாக்டரை கேட்காமல் மருந்துகளை எடுக்க வேண்டாம் ➤அதிக நேரம் நிற்காதீர்கள் ➤எதிர்மறையான விஷயங்களை யோசிக்கவோ, பேசவோ கூடாது ➤ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ள வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE.

News November 10, 2025

ரயில் நிலையங்களில் உச்சகட்ட பாதுகாப்பு

image

செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள ரயில் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக கொல்கத்தா, ஸ்ரீநகர், காசியாபாத், லக்னோ உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதனிடையே கார் வெடி விபத்து குறித்து முழு விவரத்தை டெல்லி காவல் ஆணையரிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுள்ளார்.

error: Content is protected !!