News March 30, 2025

வட்டார கல்வி அலுவலக அறையில் 15 ‘டேப்லட்’ திருடு

image

தியாகதுருகம் ஒன்றியத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க, ‘டேப்லட்’ எனும், கையடக்க கணினிகள் மொத்தம், 218 வந்தன. இதில், 191 டேப்லட்டுகள் ஆசிரியர்களுக்கு தரப்பட்ட நிலையில், மீதம், 27 ‘டேப்லட்’கள் அறையில் இருப்பு வைக்கப்பட்டன. நேற்று பொருட்களை எழுத்தர் சரிபார்த்த பொழுது 15 டேப்லட்டுகள் திருடு போனது தெரிந்தது. இது குறித்து வட்டார கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார். 

Similar News

News April 1, 2025

ரசாயனம் கலந்த தர்பூசணியா? ஒரு டிஷ்யூ பேப்பர் போதும்

image

ரசாயனங்களை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலமாக தர்பூசணி பழங்களுக்குள் செலுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் அண்மையில் தெரிவித்தார். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் சிவந்து போய் இருக்கும். அதன் மீது ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து தேய்க்கும்போது, டிஷ்யூ பேப்பர் மீது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறம் படிந்து இருந்தால் அதில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது.

News April 1, 2025

சோதனை செய்த பிறகே தர்பூசணியை வாங்குங்கள்

image

கடைகளில் இருந்து தர்பூசணி பழங்கள் வாங்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சோதனை செய்து பார்த்த பிறகே, தர்பூசணி பழத்தை வாங்குங்கள். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விரைவாக கெட்டு விடும் என்பதால், சில பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றில் இந்த ரசாயனத்தை கலந்து ஜூஸ் போடுவதாகக் கூறப்படுகிறது. லாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பழங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.

News April 1, 2025

லைசன்ஸ் இல்லாமல் பைக் ஒட்டிய +2 மாணவர்கள்

image

சங்கராபுரம், கடைவீதி மும்முனை சந்திப்பில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது +2 மாணவர்கள் 6 விலை உயர்ந்த பைக்கில், அதிக சத்தத்துடன் வேகமாக சென்றனர். போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து பைக்குகளை பறிமுதல் செய்தனர். மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து, உரிய அறிவுரைகளை வழங்கினர். பின்னர், கோர்ட்டில் அபராதம் செலுத்தக்கோரி, வாகனங்களை மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுபோல் செய்யாதீர்கள்

error: Content is protected !!