News January 6, 2025
வட்டாட்சியராகப் பதவி உயர்வு பெற்ற 4 துணை வட்டாட்சியர்கள்!

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் துணை நிர்வாக நலன் கருதி, கயத்தாறு மண்டல துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ், விளாத்திகுளம் மண்டல துணை வட்டாட்சியர்-2 சங்கரநாராயணன், ஓட்டப்பிடாரம் மண்டல துணை வட்டாட்சியர் சதீஷ்குமார், கயத்தாறு தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ரேவதி ஆகிய 4 பேருக்கும் வட்டாட்சியராக பதவி உயர்வு வழங்கி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நேற்று(ஜன.,6) உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News January 28, 2026
தூத்துக்குடி அருகே பள்ளி மாணவன் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவன் அப்பகுதியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த குடியரசு தினத்தன்று உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதாக கூறிய போது வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கவலையடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 28, 2026
கோவில்பட்டி: தாக்குதலில் ஈடுபட்ட மூவர் கைது

கோவில்பட்டியை சேர்ந்த போத்திராஜ் என்பவர் மருத்துவராக உள்ளார். இவர் கடந்த திங்கட்கிழமை காரில் சென்ற போது சுமை ஆட்டோ ஓட்டுநர் பிரவீன் குமார் என்பவரின் ஆட்டோ மீது மோதியது. இதில் ஏற்பட்ட தகராறில் பிரவீன்குமாரின் நண்பர்கள் முத்துக்குமார், தினேஷ்குமார் மற்றும் கார்த்திக் ஆகிய மூவர் மருத்துவர் உடன் வந்தவரை சரமாரியாக தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
News January 27, 2026
தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


