News April 10, 2024
வடை சுட்டு கொடுத்து வாக்கு சேகரித்த எம்எல்ஏ

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தாயார் அம்மன் குளம் அருகே உள்ள அண்ணா பூங்காவில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், திமுக வேட்பாளர் செல்வம் அவர்களை ஆதரித்து நேற்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சாலையோர வடை கடையில் வடை போட்டு கொடுத்து நூதன முறையில் உதய சூரியன் சின்னத்தில் பொதுமக்கள் வாக்களித்து வெற்றி பெற கோரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Similar News
News November 5, 2025
காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (நவ.4) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 4, 2025
காஞ்சி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே SHARE பண்ணுங்க!
News November 4, 2025
காஞ்சிபுரத்தில் குழந்தை பேறு அருளும் அற்புத கோவில்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்த திருமாலின் திவ்ய தேச கோவில்களில் திருவூரகம் உலகளந்த பெருமாள் கோவில் 50 வது திவ்ய தேச கோவிலாக போற்றப்படுகிறது. இத்தலம் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும்.1000 முதல் 2000 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில்சாமி தரிசனம் செய்தால் குழந்தைப்பேர் கிடைக்குமென்று சிறப்பும் உள்ளது, குழந்தை தடை உள்ளவர்களுக்கு இந்த செய்தியை பகிரவும்.


