News July 30, 2024
வடலூர் மாணவனுக்கு இ.பி.எஸ் இரங்கல்

வடலூரில் ஈட்டி தலையில் பாய்ந்து மாணவன் கிஷோர் உயிரிழந்ததற்கு, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ‘எக்ஸ்’ தளத்தில் கூறியிருப்பதாவது: அன்பு மகனை இழந்து தவிக்கும் கிஷோரின் பெற்றோர்களுக்கு எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 16, 2025
மங்கலம்பேட்டை: மது பாட்டில்கள் விற்றவர் கைது

மங்கலம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருணகிரி தலைமையிலான போலீசார் நேற்று எம்.பட்டி கிராம பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (49) என்பவரை போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
News August 16, 2025
கடலூரில் நிலம் வாங்குவோர் கவனத்திற்கு

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ஆனால், அந்த கவலை இனி வேண்டாம். நிலத்தின் மீது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி அறிய <
News August 16, 2025
இல.கணேசன் மறைவுக்கு வேல்முருகன் இரங்கல்

பண்ருட்டி எம்எல்ஏ-வும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவருமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில். “இனிய நண்பரும், பழகுவதற்கு எளியவருமான இல.கணேசனின் மறைவு, அவர் சார்ந்த இயக்கத்திற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.