News October 23, 2024

வடமாநில இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

image

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சீர் முகமது (28), மேடவாக்கம் சிவகாமி நகர் பகுதியில் தங்கி அங்கேயே கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று மாலை 5 மணி அளவில், கட்டிட பணி செய்யும்போது எதிர்பாராத விதமாக மின்சார கம்பி அவர் மீது பட்டதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேடவாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News August 13, 2025

செங்கல்பட்டு கூட்டுறவு வங்கிகளில் வேலை-APPLY NOW

image

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறையில் இயங்கும் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2,500 காலிப் பணியிடங்கள் உள்ளன. செங்கல்பட்டில் 126 பணியிடங்கள் உள்ளன. டிகிரி முடித்தவர்கள் <>இந்த இணையதளத்தில் <<>>வரும் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு செங்கல்பட்டு கூட்டுறவு சங்கத்தை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள்!

News August 13, 2025

செங்கல்பட்டில் 13,064 பேருக்கு பாதிப்பு… எச்சரிக்கை

image

சென்னையை ஒட்டியுள்ள மாநகராட்சிகளை தவிர, மற்ற நகர்ப்புற & ஊரக பகுதிகளில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாட்டில் 25 லட்சம் தெருநாய்கள் இருக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை செங்கல்பட்டில் 13,064 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் இல்லை. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்!

News August 13, 2025

செங்கல்பட்டில் நாளை கடைசி!

image

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினருக்கு 2 (PLA) காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதிவாய்ந்த நபர்கள் <>இந்த இணையதளத்தின்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் நாளை (ஆகஸ்ட் 14) மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்த தகுதியான நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!