News December 14, 2024

வடமாநில இளைஞரை சரமாரியாக வெட்டிய கும்பல்

image

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் மகேந்திர குமார் (23). இவர், மறைமலைநகரில் உள்ள ஒரு தனியார் உணவு கம்பெனியில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பணி முடித்து அறைக்கு சென்று கொண்டிருந்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து செல்போன் பறிக்க முயற்சித்தது. அப்போது, மகேந்திர குமார் கூச்சலிட்டதால், அருகில் உள்ள தொழிலாளர்கள் வருவதற்குள் அந்த கும்பல் மகேந்திர குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.

Similar News

News October 1, 2025

செங்கல்பட்டில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News October 1, 2025

செங்கல்பட்டு: GST குறைக்கவில்லையா? ஒரு CALL

image

மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை குறைத்து புதிய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், 353 பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஜிஎஸ்டி குறைந்த போதிலும் சில நிறுவனங்கள் விலையை குறைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான புகார்களை 1800-11-4000 என்ற toll free எண் தொடர்பு கொண்டு (அ) இந்த<> லிங்க்கில்<<>> சென்று தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News October 1, 2025

பெரும்பாக்கம்: லாரி மோதியதில் உணவு டெலிவரி ஊழியர் பலி

image

பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த உணவு டெலிவரி ஊழியர் சகாயராஜ் (40). இவர் நேற்று முன்தினம் இரவு உணவு டெலிவரி செய்ய சென்றபோது பெரும்பாக்கம் சர்ச் அருகில் சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பள்ளிக்கரணை போலீசார், லாரி டிரைவர் சீனு (30) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!