News February 18, 2025
வடமதுரை அருகே பயங்கர வெடிச்சத்தம்

திண்டுக்கல், வேடசந்தூர் தாலுகா, வடமதுரையில் இன்று 18.02.2024 காலை 11:30 மணிக்கு பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதனைத் தொடர்ந்து வடமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் லேசான அதிர்வு உணரப்பட்டது. இந்த பயங்கர வெடி சத்தம் மற்றும் அதிர்வு கடந்த சில வருடங்களாக இந்த பகுதியில் கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 13, 2025
திண்டுக்கல் ஆட்சியர் எச்சரிக்கை

திண்டுக்கல்: சுதந்திர தினமான நாளை மறுநாள்(ஆக.15) மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடைகள் அதோடு இணைந்த பார்கள் மற்றும் எப்.எல்.-2,எப்.எல்.-3,எப்.எல்.3ஏ, எப்.எல்.-3 ஏஏ, எப்.எல்.-11 உரிமம் பெற்றபார்கள் அனைத்தும் மூடப்படுகிறது.எனவே அன்றைய தினம் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. அப்படி விதிகளுக்கு மாறாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 13, 2025
திண்டுக்கல்லில் தெரு நாய்களால் அச்சம்!

திண்டுக்கல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவுக்கு தினந்தோறும் வரும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு மலா்களை பாா்த்து ரசிக்கின்றனா். இந்நிலையில், நேற்று(ஆக.12) வழக்கம்போல் பிரையண்ட் பூங்காவிலுள்ள மலா்களை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்து கொண்டிருந்தனா். அப்போது, திடீரென பூங்காவுக்குள் நுழைந்த தெரு நாய்களால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனா்.
News August 13, 2025
திண்டுக்கல்: டிப்ளமோ முடித்தால் ரூ.24,500 சம்பளம்! APPLY

திண்டுக்கல் மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலை(BRBNMPL) நிறுவனத்தில் 88 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபடி, Deputy Manager, Process assistant ஆகிய பணிகளுக்கு வரும் ஆக.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு டிப்ளமோ முடித்திருந்தாலே போதுமானது. ரூ.24,500 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க<