News April 9, 2025
வடசென்னிமலை முருகன் கோயிலுக்கு சிறப்பு பஸ்கள்

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக சேலம் மாவட்டம், ஆத்தூரில் இருந்து வடசென்னிமலை, ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் திருக்கோயில்களுக்கு வரும் ஏப்ரல் 11-ம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதேபோல், பங்குனி பௌர்ணமியை முன்னிட்டு, ஏப்.11, 12 தேதிகளில் சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு
Similar News
News April 17, 2025
சேலத்தில் ரூ. 17½ லட்சத்துடன் பிளஸ்-1 மாணவன் மீட்பு

சேலத்தில் நேற்று, 17 வயது சிறுவன் ஒருவன் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை அணுகி தனக்கு வேலை வாங்கித் தருமாறு கோரியுள்ளான். இதில் சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுநர், சிறுவனை சோதனையிட்டபோது பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் விசாரனையில், பெற்றோருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வந்தது தெரியவந்தது.
News April 17, 2025
ஏற்காடு, பூலாம்பட்டிக்கு ஜாக்பாட்! ₹20 கோடியில் புதிய வசதிகள்!

சுற்றுலாத் துறையின் மானியக் கோரிக்கையில், ஏற்காடு மற்றும் பூலாம்பட்டி ஆகிய முக்கிய சுற்றுலாத் தலங்களில் வாகன நிறுத்துமிடம், நடைபாதை, பூங்காக்கள், உணவகங்கள் மற்றும் தகவல் மையங்கள் அமைப்பதற்காக ரூபாய் 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு, பயணிகளை ஈர்க்கும் வகையிலும், அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் பயன்படுத்தப்படும்.
News April 17, 2025
சேலத்தில் இலவச கடிகார பழுதுநீக்கும் பயிற்சி

சேலம் அரசு ஐடிஐயில், கடிகார பழுதுநீக்கம் தொடர்பான 3 மாத குறுகிய கால இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கான சேர்க்கை நடக்கிறது. இதில் சேர விருப்பம் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், நாளை ஏப்ரல் 18-ம் தேதிக்குள் சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி பயிற்சி பெற்று பயன்பெறலாம் என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.