News January 21, 2025

வங்கி கொள்ளையில் இருவர் அம்பையில் ஆஜர்

image

மங்களூர் வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரத்தில் நெல்லை களக்காடு அருகே உள்ள பத்மநேரியை சேர்ந்த முருகாண்டி கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த ஜோஸ்வா ஆகிய 2 பேரை மங்களூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இருவரிடம் துப்பாக்கிகள் மற்றும் பணம் நகைகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அம்பை நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட 2 நபர்களையும் இன்று நீதிபதிக்கு முன்பாக போலீசார் ஆஜர்படுத்தினர்.

Similar News

News March 13, 2026

நெல்லை மாவட்ட காவல்துறையின் புதிய திட்டம்

image

நெல்லை மாவட்ட எஸ்பி டாக்டர் வி.பிரசண்ண குமார் ஐபிஎஸ் “மக்களைத் தேடி மாவட்ட காவல்” திட்டத்தை அவர் மேலத்தாழையூத்தில் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தனி காவலர். 3 மாதங்களில் 100% சிசிடிவி கண்காணிப்பு இலக்கு. பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க: 94981 01740 என்ற புதிய மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். *ஷேர் பண்ணுங்க.

News March 12, 2026

நெல்லை: 74 அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

image

நெல்லை மாவட்டத்தில் விசார பருவத்திற்கான நெல் அறுவடை செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் நெல்லை கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில் 74 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதில் தேவையான அனைத்து உபகரணங்களும் காலி சாக்குகளும் போதிய அளவில் வழங்கப்பட்டு வருகிறது.நெல் குவிண்டால் ஒன்றுக்கு அரசு நிர்ணயித்த விலை விபரங்கள் கொள்முதல் நிலையங்களே வைக்கப்பட்டுள்ளன.

News March 12, 2026

தொழில் பங்கீட்டாளர் இணையதள போர்டல்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு – நிதி தகுதி தளர்வு TANFINET இணையதள போர்டல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார் இன்று தெரிவித்தார். தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் பாரத் நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு உயர்தர இணைய சேவைகளை வழங்கி வருகிறது என்றார்.

error: Content is protected !!