News March 31, 2025

வங்கி அதிகாரி போல் பேசி 11,000 மோசடி

image

புதுச்சேரி ஜான்சி நகரை சேர்ந்த சரவணன் என்பவரிடம் வங்கி அதிகாரி பேசுவதாக கூறி, வங்கி விவரங்களை கேட்டுள்ளனர். இதனை நம்பி சரவணனும் மர்ம நபருக்கு வங்கி விவரம் மற்றும் ஓ.டி.பி. எண்ணை கூறியுள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்த ரூ.11 ஆயிரத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது. அவர் நேற்று கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

Similar News

News April 1, 2025

புதுச்செரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.8 ஆயிரமாக உயர்வு

image

மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.8 ஆயிரமும், மழைக்கால நிவாரணமாக ரூ.4 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கான அரசாணை வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது தடைக்கால நிவாரணம் ரூ.8 ஆயிரமும், மழைக்கால நிவாரணம் ரூ.4 ஆயிரமும் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று புதுச்சேரி அரசு இன்று தெரிவித்துள்ளது.

News April 1, 2025

பகுதி நேர வேலை வாய்ப்பு எனக்கூறி 2.35 லட்சம் மோசடி

image

புதுச்சேரி இலாசுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சபரிநாதன். இவரை டெலிகிராம் செயலியில் தொடா்பு கொண்ட மா்ம நபா், பகுதி நேர வேலைவாய்ப்பு உள்ளதாகவும், வீட்டிலிருந்தபடி சம்பாதிக்கலாம் என்றும் கூறியுள்ளார். இதை நம்பிய சபரிநாதன் மா்ம நபா் கூறியபடி ரூ.2.35 லட்சத்தை பல தவணைகளில் அனுப்பி ஏமாந்தார். அவர் நேற்று கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

News April 1, 2025

புதுவை முன்னாள் முதல்வர் கைது

image

ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாநில தலைவர் அமுதரசனை தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் அரியாங்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் முதல்வர் உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!