News August 25, 2024

வங்கிகளின் SMS இனி வராது?

image

டிராய் உத்தரவால், வங்கிகள், நிதி நிறுவனங்கள், இ-காமெர்ஸ் நிறுவன SMS-கள் அடுத்த மாதம் முதல் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. மோசடியை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் URL, OTT லிங்குகள் கொண்ட SMS-களை செப்.1 முதல் தடுக்க டிராய் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆக.31க்குள் மொபைல் நிறுவனங்களிடம் வங்கிகள், நிதிநிறுவனங்கள் பதிய வேண்டும். இல்லையேல் அதன் SMSகள் வாடிக்கையாளர்களுக்கு செல்லாது.

Similar News

News July 7, 2025

அம்மன் சென்டிமென்ட்.. ஆட்டத்தை தொடங்கும் இபிஎஸ்!

image

2026 தேர்தல் பரப்புரையை இபிஎஸ் இன்று தொடங்குகிறார். கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் உள்ள பிரசித்திபெற்ற வனபத்திரகாளியம்மன் ஆலயத்தில் இருந்து ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தை காலை 9 மணிக்கு தொடங்க உள்ளார். பின்னர் மாலை 4 மணிக்கு மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் உள்ள காந்தி சிலை அருகே ரோடு ஷோ நடத்தும் இபிஎஸ் இன்று மட்டும் 62 கி.மீ பயணம் செய்ய உள்ளார்.

News July 7, 2025

ஜூலை 7: வரலாற்றில் இன்று..

image

★1456: தூக்கிலிடப்பட்ட 25 ஆண்டுகள் கழித்து ஜோன் ஆஃப் ஆர்க் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டது ★1575: இங்கிலாந்துக்கும் ஸ்காட்லாந்துக்கும் இடையே ரீட்சுவயர் என்ற இடத்தில் இடம்பெற்றது ★1799: ரஞ்சித் சிங்கின் படையினர் லாகூர் அடுத்துள்ள பகுதிகளைப் கைப்பற்றினர் ★1865: ஆபிரகாம் லிங்கன் கொலை தொடர்பான 4 பேர் தூக்கிலிடப்பட்டனர் ★1981: இந்திய கிரிக்கெட் அணி Ex. கேப்டன் தோனியின் பிறந்தநாள் இன்று.

News July 7, 2025

நிர்வாகிகள் மதிப்பதில்லை என புலம்பிய நயினார் நாகேந்திரன்

image

கட்சி நிர்வாகிகளை செல்போனில் தொடர்பு கொண்டால் சிலர் மதிப்பதில்லை; ஒரு வணக்கம் கூட சொல்வதில்லை என நயினார் நாகேந்திரன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். பாஜக தலைவரான பிறகும் கட்சியில் அவருக்கு உரிய மரியாதை இல்லை என பேசப்படும் நிலையில், நயினாரின் பேச்சு அதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தலைவர் பதவியில் இருந்து விலகி, அரியணையை அண்ணாமலைக்கு கொடுங்கள் என சிலர் கருத்து கூறி வருகின்றனர்.

error: Content is protected !!