News August 25, 2024
வங்கிகளின் SMS இனி வராது?

டிராய் உத்தரவால், வங்கிகள், நிதி நிறுவனங்கள், இ-காமெர்ஸ் நிறுவன SMS-கள் அடுத்த மாதம் முதல் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. மோசடியை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் URL, OTT லிங்குகள் கொண்ட SMS-களை செப்.1 முதல் தடுக்க டிராய் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆக.31க்குள் மொபைல் நிறுவனங்களிடம் வங்கிகள், நிதிநிறுவனங்கள் பதிய வேண்டும். இல்லையேல் அதன் SMSகள் வாடிக்கையாளர்களுக்கு செல்லாது.
Similar News
News March 26, 2026
ஈரோடு: சிலிண்டர் தட்டுப்பாடா? இனி கவலை வேண்டாம்!

அடிக்கடி சிலிண்டர் தீர்ந்துபோய் கவலைப்படுகிறீர்களா? இனி அந்த கவலையே வேண்டாம்! உங்கள் கடைக்கோ அல்லது தொழிற்சாலைக்கோ நேரடியாகக் குழாய் வழியாகவே இயற்கை எரிவாயு (PNG) இணைப்பைப் பெறலாம். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 1800-22-4344 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் விபரங்களுக்கு: மாநில ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ஆர். பிரசாத்தை 91-63574-69742 என்ற எண்ணில் உடனே அழையுங்கள்! இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க
News March 26, 2026
வெயிலில் முகத்தை மறைப்பது சருமத்தை பாதுகாக்குமா?

வெயிலில் செல்லும்போது பெண்கள் துப்பட்டாவால் முகத்தை கவர் செய்வதை பார்த்திருப்போம். இது உண்மையில் சருமத்தை பாதுகாக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். சூரியனின் புற ஊதா கதிர்கள், காற்று மாசு ஆகியவற்றில் இருந்து இது சருமத்தை காப்பதோடு, சன் டானிங், சன்பர்ன் ஆகாமலும் இது தடுக்கிறது. பருத்தியாலான திக்கான துப்பட்டாவை பயன்படுத்தி முகத்தை மூடிவிட்டு வெளியே செல்லும்படி டாக்டகள் கூறுகின்றனர். SHARE IT
News March 26, 2026
ஈரானுக்கு அடுத்த அதிர்ச்சி… கடற்படை தளபதி கொலையா?

ஹார்முஸ் ஜலசந்தியில் வெளிநாட்டு கப்பல்களை தடுத்து நிறுத்தியதில் முக்கிய பங்காற்றிய ஈரான் IRGC கடற்படை தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு ஈரான் அருகே ஏற்கெனவே உயர் தலைவர் தொடங்கிய பல முக்கிய தலைவர்களை இழந்த ஈரானுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எனினும் இதை இஸ்ரேலிய ராணுவமோ அல்லது ஈரான் தரப்போ உறுதிச் செய்யவில்லை.


