News April 15, 2025

வக்கீலுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் மீது வழக்குப்பதிவு

image

பெருந்தரக்குடியைச் சேர்ந்த வக்கீல் ஆனந்தன்(38) என்பவரது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன்(28). இவர் ஆனந்தன் வீட்டிற்கு அருகே தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனை ஆனந்தன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், ஆனந்தனை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக ஆனந்தன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், பாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News

News September 17, 2025

திருவாரூர்: ஆதார் கார்டு தொலைந்து விட்டதா ?

image

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். <>myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid <<>>என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் கிடைத்துவிடும். அதைவைத்து புதிய ஆதார் அட்டைக்கு எளிதாக விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News September 17, 2025

திருவாரூரில் கல்வி கடன் முகாம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்தியன் ஓவர்சிஸ் இணைந்து நடத்திய மாபெரும் கல்வி கடன் முகாமில் 383 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.4 கோடியே 99 லட்சம் மதிப்பில் கல்வி கடனுக்கான வங்கி வரைவோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வ.மோகனச்சந்திரன் வழங்கினார். இந்நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

News September 17, 2025

திருவாரூர்: பெரியார் சிலைக்கு மரியாதை செய்த எம்.எல்.ஏ

image

தந்தை பெரியார் 147-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் க.மாரிமுத்து எம்எல்ஏ பெரியரின் சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார், இந்நிகழ்வில் முத்துப்பேட்டை சிபிஐ ஒன்றிய செயலாளர் எம்.உமேஷ்பாபு உடன் இருந்தார். மேலும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!