News March 13, 2025
லோடு வாகனத்தில் படுத்து உறங்கியவர் உயிரிழப்பு

சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த நடராஜன் (46), நேற்று (மார்.12) சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் பகுதியில் உள்ள ‘தாய் சும்மிட் ஆட்டோபார்ட்ஸ்’ எனும் தொழிற்சாலைக்கு லோடு ஏற்ற சென்றுள்ளார். லோடை இறக்கி முடித்துவிட்டு, வாகனத்திலேயே படுத்து உறங்கியுள்ளார். வாகனத்தை எடுக்க சொல்லி, மற்றவர்கள் எழுப்பியபோது அவர் உயிரிழந்தது தெரிந்தது. லோடு ஏற்றிய களைப்பில் உயிரிழந்திருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.
Similar News
News September 12, 2025
அம்பேத்கர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர்
தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். https://tinyurl.com/ambedkaraward லிருந்து இவ்விருதுக்கான விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் நேரில் விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 20.10.2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளா.
News September 11, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.11) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 11, 2025
ஆசிரியர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து

இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் முதன்மை கல்வி அலுவலர் (மு.கூ.பொ) அ.நளினி, மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) ச.எழில் ஆகியோர் உள்ளனர்.