News September 5, 2025

‘லெக் பீஸ்’ இல்லை: ரூ.15,000 இழப்பீடு வழங்க உத்தரவு

image

உப்பிலிபாளையம் பகுதியை சோ்ந்த கிரிஸ்டோபா், அப்பகுதியில் உள்ள மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான பிரியாணி கடைக்கு, தனது குடும்பத்துடன் கடந்த ஜனவரி மாதம் சென்றுள்ளாா். அப்போது, முழு கிரில் ஆர்டர் செய்த நிலையில் அதில் லெக் பீஸ் இல்லை. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்த வழக்கை விசாரித்த கோவை நுகர்வோர் நீதிமன்றம் நேற்று கிறிஸ்டோபருக்கு, கடை உரிமையாளர் ரூ.15,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

Similar News

News September 6, 2025

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (05.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 5, 2025

கோவை: ரூ.40,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

கோவை மக்களே, இந்திய விமான நிலைய ஆணையத்தில் Airports Authority of India (AAI) காலியாகவுள்ள 976 Junior Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு Engineering படித்திருந்தால் போதுமானது. இந்த வேலைக்கு சம்பளம் ரூ.40,000 முதல் 1,40,000 வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள், வரும் 27ம் தேதிக்குள், <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 5, 2025

பாஜக நிர்வாகி மீது அரிவாள் தாக்குதல்: 3 பேர் கைது

image

கோவை பீளமேடு அருகே பா.ஜ.க மண்டல துணைத் தலைவர் அஜய் (36) மீது அரிவாளால் தாக்கிய வழக்கில் நாகராஜ், அஸ்வின், அனிதா ஆகிய மூவர் நேற்று கைது செய்யப்பட்டனர். முன்விரோதம் மற்றும் புகையிலை பொருள் விற்பனை குறித்த புகாரே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. பின் காயமடைந்த அஜய் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தலைமறைவாக உள்ள முருகேசன், அஜய்யின் மனைவி பிரியாவை போலீசார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!